இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார்.
பேஸ்புக் வலைத்தள பயன்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்
யார் இந்த ஹிரூசி வசுந்தரா.?
கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும் திகழ்கின்றார்.
மாணவர்களை மிகவும் கன்னியமான முறையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதனை பிரதிபலிக்கும் வகையில் பிரபல புகைப்பட கலைஞரும், பேராசிரியருமான தசுன் நிலன்ஜன இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
குறிப்பாக இந்த புகைப்படப்பிடிப்பு கம்பஹா நிட்டம்புவ – அத்தனகல ரஜமஹா விஹாரையில் நடத்தப்பட்டுள்ளது.
பெரும்பான்மை சமூகத்திற்கும், சிறுபான்மை சமூகத்திற்கும் இடையில் ஏதோ வகையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், இன்று ஒரு சிங்கள யுவதியை பகிரங்கமாகவே வர்ணிக்கும் அளவிற்கு நல்லிணக்கம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஹிருஷி வசுந்தராவின் இந்த புகைப்பட களஞ்சியம் ஆதாரமாக திகழ்கின்றது.
தொடரட்டும் நல்லிணக்கம்.- புகைப்பட கலைஞர்.
இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்திய புகைப்பட கலைஞரான பேராசிரியர் தசுன் நிலன்ஜனவிடம் ட்ரூ சிலோன்,இணையம் வினவியது. இதற்கு....
இந்த விடயத்தை தானும் உணர்ந்ததாக கூறிய அவர், நாட்டிற்கு இவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்த கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
நாம் அனைவரும் பொதுவாக உணர்வுகளையே சுமந்தே செல்வதாகவும், ஏன் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார். நாம் அனைவரும் சமநிலையாக இருக்க வேண்டும் என தசுன் நிலன்ஜன குறிப்பிடுகின்றார்.
எது எவ்வாறாயினும், நாங்கள் அனைவரும் ஒரே தாய்நாட்டையே பகிர்ந்துக் கொள்கின்றோம் எனவும், நாம் அனைவரும் அதேயே மதிக்கின்றோம் எனவும் புகைப்பட கலைஞரான பேராசிரியர் தசுன் நிலன்ஜன தெரிவித்துள்ளார்.