ஈரான் கலாசார நிலையமும் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையும் இணைந்து 'ஈரான் - இலங்கை நட்புறவுத் திரைப்படவிழா' ஒன்றை இரண்டாவது ஆண்டாக இம்முறையும் ஏற்பாடு செய்துள்ளன.
இத்திரைப்படவிழா எதிர்வரும்; 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெறவுள்ளது.
இத்திரைப்பட விழாவில் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு 'ராணாவின் மௌனம்' (Rannas’ Silence) என்ற திரைப்படமும், மாலை 3.00 மணிக்கு 'வீ காவ் எ கெஸ்ற்' (We Have a Guest) என்ற திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.
இரண்டாம் நாளான 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு 'கொக்கற்ரி' (Coquetry) என்ற திரைப்படமும், மாலை 3.00 மணிக்கு 'சீஸன் ஒவ் நர்கீஸ்' (Season of Narges) என்ற திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.
சர்வதேச அளவில் வெளிவரும் தரமான திரைப்படங்களை பொது இரசனைத்தளத்திற்குக் கொண்டுவரும் ஓர் முயற்சியாக, இத்திரைப்பட விழா ஒழுங்குசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.