வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 10 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. எனினும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
கொரோனா அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரதும் தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடைய மன்னாரைச் சேர்ந்த எட்டு பேரினதும் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுகூடப் பரிசோதனை செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.