காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா வைரஸ் சந்தேக நபரான கைதி ஒருவர் அந்த வைத்தியசாலையிலிருந்து இன்று வியாழக்கிழமை மாலை தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் மாத்தறை – நெவிநுரவ பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கொரோனா வைரஸ் அறிகுறி அவருக்கு தென்பட்டதை அடுத்து கராப்பிட்டிய வைத்தியசாலையின் 36ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த வார்ட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கைதி அங்கிருந்து இன்று மாலை தப்பிச்சென்றிருக்கின்றார்.
எனினும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.