நாடு முழுவதிலும் உள்ள மருந்தகங்களை நாளந்தம் திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இவ்வாறு திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
எனவே சங்கத்தின் உறுப்பினர்கள் அரசாங்க ஒப்புதலுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் ஏற்ப தங்கள் மருந்தகங்களை பொதுமக்களுக்காக திறக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும் எண்ணிகையிலான நோயாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனை கருத்திற் கொண்டே மருந்தகங்களை தினமும் திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்திருக்கின்றது.