கம்பஹா மாவட்டத்தை முழுமையாக முடக்குவதற்கு (Lock Down) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பிலான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் சார்ந்த குழு இந்த யோசனையை அமைச்சரிடம் முன்வைத்துள்ளது.
வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15000 பேர் கம்பஹா மாவட்டத்தில் வாடகை வீடுகள், அறைகளில் வசித்து வருவதாக இந்தக் குழுக்கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
மேலும் கம்பஹா மாவட்டத்திலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கு இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிமாவட்டங்களில் வருவதும், மாவட்டத்திலிருந்து வெளியேறுவதும் முற்றிலும் தற்காலிகமாகத் தடை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.